இராமபிரான் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணித்த பொது, பல இடங்களில் தங்கி அந்தந்த இடங்களைப் புனிதப் படுத்தியுள்ளார். அப்படிப் புனிதப்படுத்திய தளங்களில் பன்னையம்பதியும் ஒன்று. அதனால் இங்கு வருடந்தோறும் இராம நவமி வெகு சிறப்பாக கொண்டாடப் படுகிறது. அதே போல் குன்று தோறும் முருகன் பழனியில் கால் வைக்கும் முன் தனது பாதங்களைப் பதித்த இடமும் பண்ணையம்பதிதான்
இந்த ஊர் மக்கள் எங்கு சென்றாலும், எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும் அதில் முழுமையாக ஈடுபட்டு உழைத்து புகழின் உச்சியைத் தொட்டு விடுகிறார்கள். இவர்கள் எங்கு வாழ்ந்தாலும் "பண்ணை" என்ற மண்ணை மறக்காமல் தங்கள் பெயருடனோ அல்லது தாங்கள் நடத்தும் நிறுவனத்துடனோ இணைத்து தாம் பிறந்த மண்ணுக்கு நன்றியை செலுத்துகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment